தமிழ்நாடு செய்திகள்
விநாயகர் சதுர்த்தி- நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கம்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பொது விடுமுறை.
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (7-ந்தேதி) பொது விடுமுறை என்பதால் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
அதன்படி சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல் - சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.