தமிழ்நாடு செய்திகள்

மழை வெள்ளத்தால் வாகனங்கள் சேதம்? பழுது பார்க்க இலவச எண்கள் வெளியீடு

Published On 2023-12-10 18:08 IST   |   Update On 2023-12-10 18:08:00 IST
  • மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மூழ்கின.
  • சேதமடைந்த கார்களை மறுபடியும் இயக்க முடியாத நிலையில் உள்ளனர்.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மூழ்கின. இதனால், சேதமடைந்த கார்களை மறுபடியும் இயக்க முடியாத நிலையில் அதன் உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



Tags:    

Similar News