தமிழ்நாடு
பயணிகளின் வசதிக்காக சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
- கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
- மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.
இதேபோல, மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.