தமிழ்நாடு செய்திகள்

திருப்பதி-காட்பாடி ரெயில் 15-ந்தேதி வரை ரத்து

Published On 2023-10-09 15:40 IST   |   Update On 2023-10-09 15:40:00 IST
  • ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன.
  • 15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் வழித்தடங்களில் பராமரிப்புப் பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், 15-ந்தேதி வரை திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் பயணிகள் ரெயில் (எண்: 07659), மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரெயில் (எண்: 07582) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் காட்பாடியில் இருந்து காலை 9.50 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 06417), மறுமாா்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரெயிலும் (எண்: 06418) ரத்து செய்யப்படுகிறது.

15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண்:16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி விழுப்புரம் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News