தமிழ்நாடு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 867 கன அடியாக சரிந்தது

Published On 2023-06-01 04:13 GMT   |   Update On 2023-06-01 04:13 GMT
  • அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.78 அடியாக இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.72 அடியாக சரிந்தது.

இனிவரும் நாட்களில் இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News