தமிழ்நாடு

தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்- ரூ.9000 கோடிக்கு முதலீடு

Published On 2024-03-13 12:33 GMT   |   Update On 2024-03-13 12:33 GMT
  • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும்.
  • தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News