தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

Published On 2024-01-12 19:58 IST   |   Update On 2024-01-12 19:58:00 IST
  • தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
  • பத்தமடை பரமசிவத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.

சென்னை:

2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.

விருது பெறுவோர்:

திருவள்ளுவர் விருது: தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

பேரறிஞர் அண்ணா விருது: பத்தமடை பரமசிவம்

பெருந்தலைவர் காமராசர் விருது: உ.பலராமன்

மகாகவி பாரதியார் விருது: கவிஞர் பழநிபாரதி

பாவேந்தர் பாரதிதாசன் விருது: எழுச்சிக் கவிஞர் முத்தரசு

திரு.வி.க. விருது: ஜெயசீல ஸ்டீபன்

கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News