தமிழ்நாடு செய்திகள்
பணி முடிப்போம்.. வாகை சூடுவோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு.
- ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பதிவு.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளன.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்து வெற்றி பணியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பணி தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் 2024 பணி என்றும், பணி முடிப்போம்.. வெற்றி வாகை சூடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், இந்தியா வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.