தமிழ்நாடு

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி 1000 தீபங்கள் ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்

Published On 2024-04-06 04:26 GMT   |   Update On 2024-04-06 04:26 GMT
  • வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர்.
  • பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

தஞ்சாவூா்:

தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கோலமிடுதல், கிரிக்கெட் போட்டி, பலூன் பறக்க விடுதல் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த கழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏராளமான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்தை கோலமாக வரைந்து அதில் 1000 தீபங்கள் ஏற்றினர்.

அப்போது வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். மேலும் ஒலி பெருக்கியில் விழிப்புணர்வு பாடலும் போடப்பட்டன.

இந்த நூதன விழிப்புணர்வை பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

Tags:    

Similar News