தமிழ்நாடு

பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

Published On 2022-06-30 05:04 GMT   |   Update On 2022-06-30 07:39 GMT
  • குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமூக நலத்துறை நடவடிக்கை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், ராணிப்பேட்டையில் உள்ள ஆண்கள் அரசு பள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்தது.

Tags:    

Similar News