தமிழ்நாடு

தி.மு.க. துணையோடு அ.தி.மு.க. அலுவலகத்தை ஓ.பி.எஸ். சூறையாடினார்- தங்கமணி பேச்சு

Published On 2022-07-11 06:44 GMT   |   Update On 2022-07-11 08:01 GMT
  • ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
  • வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று நாம் கூறுவதுண்டு.

பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். நமது கட்சியை சேர்ந்த சிலர் துரோக செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. தி.மு.க. துணையுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை இடிக்க சென்றுள்ளனர்.

இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இவர்கள் உண்மையான அ.தி.மு.க.வின் தொண்டர்களா? துரோகம் செய்தவர்கள். கட்சியை காட்டிக் கொடுத்தவர்கள். இனி அவர்கள் கட்சிக்கு தேவையா?

வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று நாம் கூறுவதுண்டு. அது இந்த பொதுக்குழு தான். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாம் புறப்பட்டு விட்டோம். இதில் துரோகம் செய்தவர்களுக்கு இடம் இல்லை.

2024 பாராளுமன்ற தேர்தலிலும் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News