தமிழ்நாடு (Tamil Nadu)

ராஜபாளையத்தில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு- பெண்ணிடம் போலீசார் விசாரணை

Published On 2023-06-13 04:44 GMT   |   Update On 2023-06-13 04:44 GMT
  • கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
  • குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். டாக்டரான இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் அலமாரியில் சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை வைத்து பூட்டி, அதன் சாவியை மேலே வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் கனகராஜ் தனது குடும்பத்தினர் மற்றும் கிளினிக்கில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தார்.

ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து டாக்டர் கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர் கனகராஜ் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் அழகாபுரி தொட்டிய பட்டிைய சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி குருவம்மாள் (வயது60) பணத்தை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News