தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஜெயில் கைதிக்கு கொரோனா

Published On 2022-08-05 05:23 GMT   |   Update On 2022-08-05 05:23 GMT
  • குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.
  • குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. தற்பொழுது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று மாவட்டம் முழுவதும் 682 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் ஆண்கள் 14 பேர் பெண்கள் ஆவார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News