தமிழ்நாடு

அம்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

Published On 2023-07-06 09:00 GMT   |   Update On 2023-07-06 09:00 GMT
  • தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

அம்பையில் இருந்து இன்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் வி.கே.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் அம்பை அருகே கோடராங்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த வாகனம் டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News