என்னை அரசியலை விட்டு போக வைப்பது கஷ்டம்...
- நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
- முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றி வைத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
* திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்றுக் கொண்டேன்.
* நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்.
* கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.
* நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
* முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
* எனது சொந்த காசில் தான் அரசியல் செய்து வருகிறேன்.
* என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம்.
* என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது... அழுத்தமாக நடைபோடுவேன்.
* கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை... நஷ்டம் தான்.
* விவசாயிகளுக்கு மாநில அரசு செய்தது கூட மத்திய அரசு செய்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.