தமிழ்நாடு

எந்த சட்டமும் எவரது உரிமையையும் பறிக்க கூடாது- ஜெயக்குமார்

Published On 2022-12-14 09:18 GMT   |   Update On 2022-12-14 09:18 GMT
  • அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்.
  • இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளான வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை அவரது நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்புக்கு அனுமதி கோரி உள்ளோம்.

அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம். இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் உரிமையை யார் மீட்டெடுத்தது. காவிரி நதி நீர் பிரச்சினையில் தி.மு.க. என்ன செய்தது. கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்தார்கள். நாங்கள்தான் வழக்குத் தொடுத்துள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் யார் உரிமையும் பறிக்ககூடாது. உரிமையைப் பறித்தால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.வாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News