தி.மு.க. தொகுதி பங்கீட்டுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க.
- தி.மு.க. கூட்டணியில் இந்த முறை காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
- பேச்சுவார்த்தையின்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர் பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்குவோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த முறை காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதியை எதிர் பார்க்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்குமா? என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர் பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு முடிவுக்காக அ.தி.மு.க. காத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
அப்படி கூட்டணி மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்? என்பது பற்றியும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும், இதன் காரணமாகவே பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.