தமிழ்நாடு

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Published On 2024-03-22 05:41 GMT   |   Update On 2024-03-22 05:51 GMT
  • உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

சென்னை :

பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* கவர்னர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.

* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.

* மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.

* பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.

* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.

* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.

* நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை.

* தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.

* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

* சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

* 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.

* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்.

* நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags:    

Similar News