தமிழ்நாடு

போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-05-01 12:31 GMT   |   Update On 2023-05-01 12:31 GMT
  • திமுக எம்.பி. அப்துல்லா ஜந்தர் மந்தர் சென்று திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
  • போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக எம்.பி. அப்துல்லா இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News