தமிழ்நாடு
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்: ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுத்த சபாநாயகர்
- தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் இன்று சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டசபை கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்துக்காக சபாநாயகர் அப்பாவு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.