தமிழ்நாடு

விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

Published On 2024-03-05 10:31 GMT   |   Update On 2024-03-05 10:31 GMT
  • சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
  • சர்வதேச விமானம் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர்.

ஆலந்தூர்:

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அபுதாபியில் இருந்து வரும் சென்னை விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களுடைய உடமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் யாரிடமும் தங்கம் சிக்கவில்லை.

மேலும் அந்த சர்வதேச விமானம் உள்நாட்டு விமானம் செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்டு சோப் வடிவில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மொத்தம் 4½ கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ½ கோடி ஆகும். கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News