தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம்

Published On 2024-01-12 13:17 IST   |   Update On 2024-01-12 13:17:00 IST
  • அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
  • சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 14-ந் தேதி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.25 லட்சம் பேர் இந்த ஆண்டு முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

பிற நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் முன்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News