தமிழ்நாடு

92-வது நினைவுநாள்: திருப்பூர் குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி

Published On 2024-01-11 08:56 GMT   |   Update On 2024-01-11 08:56 GMT
  • அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர்:

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News