தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் 12-ந்தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் தகவல்

Published On 2024-02-04 06:24 GMT   |   Update On 2024-02-04 06:24 GMT
  • கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொகுதி பங்கீட்டு குழுவினர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்த தி.மு.க. தலைவர் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News