தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வில் போட்டியிட வரும் 21-ந்தேதி முதல் விண்ணப்பம்

Published On 2024-02-19 10:21 IST   |   Update On 2024-02-19 10:34:00 IST
  • உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • பொதுத்தொகுதிக்கு ரூ.20,000, தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.02.2024 (புதன்கிழமை) முதல் 1.03.2024 (வெள்ளிக்கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News