தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர்- போக்சோவில் வழக்கு

Published On 2023-08-01 12:07 IST   |   Update On 2023-08-01 12:07:00 IST
  • சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
  • சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

கோவை:

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஹரிதாஸ் (வயது23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த நிலையில் ஹரிதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் காரணமாக சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து டாக்டர்கள் சூலூர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிதாஸ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஹரிதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News