தமிழ்நாடு

எண்ணூர் வாயு கசிவு- தொழிற்சாலை இயங்க தடை விதித்து நோட்டீஸ்

Published On 2023-12-27 13:14 GMT   |   Update On 2023-12-27 13:14 GMT
  • தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
  • தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

பின்னர், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

ஐஆர்எஸ், அனுமதி பெறும் வரை தொழிற்சாலை இயங்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எந்த இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதோ, அதை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

Tags:    

Similar News