தமிழ்நாடு

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர்... ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை

Published On 2023-07-22 10:40 GMT   |   Update On 2023-07-22 10:40 GMT
  • எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான்.
  • செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இவ்வளவு எளிதாக அமலாக்கத்துறையிடம் சிக்கினார் என்பதற்கு கரூர் வாசிகள் கூறுவதாவது:-

எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான். பொருளாதாரத்திலும், செல்வாக்கிலும் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. கடந்த தேர்தலில் செந்தில்பாலாஜியிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோல்வியை தழுவியது தெரிந்ததே. அதனால் எப்படியாவது செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது. அதாவது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான் அண்ணாமலையின் சகோதரி வாடகைக்கு குடியிருக்கிறார். அண்ணாமலை கரூருக்கு வரும் போதெல்லாம் சகோதரி வீட்டுக்கு வருவதுண்டு. அப்போது மரியாதை நிமித்தமாக இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அந்த நேரத்தில்தான் செந்தில்பாலாஜி தொடர்பான பல தகவல்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் திரட்டி கொடுத்ததாகவும் அதை வைத்தே அண்ணாமலை தனது ஆட்டத்தை தொடங்கி செந்தில் பாலாஜியை ஆட்டம் காண வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

Tags:    

Similar News