தமிழ்நாடு

வருகிற 4-ந்தேதி முதல் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு குஷ்பு ஆதரவு திரட்டுகிறார்

Published On 2024-04-01 05:55 GMT   |   Update On 2024-04-01 05:55 GMT
  • 6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
  • வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.

சென்னை:

பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு வருகிற 4-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

4-ந்தேதி (வியாழக்கிழமை), 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.

7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தமான் தீவில் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி மும்பையில் பிரசாரம் செய்கிறார்.

மீண்டும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் குஷ்பு 11-ந்தேதி கிருஷ்ணகிரியிலும், 12 மற்றும் 13-ந்தேதிகளில் நாமக்கல்லிலும் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி திருப்பூரில் பிரசாரம் செய்கிறார்.

அதன் பின்னர் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.

வருகிற 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார்.

Tags:    

Similar News