தமிழ்நாடு செய்திகள்
அக்.14ந்தேதி தி.மு.க. "மகளிர் உரிமை மாநாடு": கனிமொழி அறிவிப்பு
- "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.