தமிழ்நாடு

விருத்தாசலம் பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-04-26 11:57 GMT   |   Update On 2023-04-26 11:57 GMT
  • பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
  • கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்தார்.

இவர் தனது பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். 

Tags:    

Similar News