தமிழ்நாடு

40 அடி திடீர் பள்ளத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு

Published On 2023-03-27 07:59 GMT   |   Update On 2023-03-27 07:59 GMT
  • திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
  • ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. மலையடிவாரம் இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

வழக்கம் போல் கடந்த 20-ந் தேதி காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் சென்றுள்ளார்.

அப்போது, நிலத்தின் நடுப்பகுதியில் திடீர் சத்தத்துடன் 15 அடி 40 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு, விவசாய நிலம் உள்வாங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான முருகேசன் மற்றும் 100 நாள் திட்ட பணியாளர்கள் அருகில் யாரும் செல்லாதவாறு 100 மீட்டர் தொலைவுக்கு கயிறு கட்டி பாதுகாப்பு செய்யப்பட்டி ருந்தது.

பள்ளத்தின் அடியில் தண்ணீர் செல்வது போல சலசலப்பு சத்தம் கேட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமா னோர் வந்தனர். தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய்த்து றையினர் வந்து பார்த்தனர். இது சம்மந்தமாக மாவட்டம் நிர்வாகம் மூலம் இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஹிஜாஸ்பஷீர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் அசரார் அஹமத் மற்றும் ஜெயபால் ஆகியோர் கூவல்குட்டை கிராமத்துக்கு சென்று நிலத்தில் ஏற்பட்ட பள்ளத்தையும், சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்து மண் மற்றும் பாறை துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிக்கு பின்னர்தான் முழு தகவல் தெரியவரும் என தெரவித்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

"திடீர் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஒரு வாரத்தில் மற்றொரு குழு ஆய்வுக்கு வரும் என்றார். மேலும், அருகில் நீரூற்று உள்ளதா அல்லது சமீப காலங்களில் அந்த பகுதியில் வேறு ஏதேனும் பணிகள் நடந்துள்ளதா என உள்ளூர் அதிகாரிகளிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். 

Tags:    

Similar News