தமிழ்நாடு

கைதான 4 வாலிபர்களை படத்தில் காணலாம்.

செல்போன் செயலி மூலம் நூதன முறையில் வாலிபர்களிடம் பணம் பறித்த கும்பல்- 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

Published On 2023-11-25 05:37 GMT   |   Update On 2023-11-25 05:37 GMT
  • கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
  • சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 6 பேர் சிக்கினர்

இதனை அறிந்த அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றனர். அந்த கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அந்த கும்பல் தப்பிச்சென்ற காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 6 பேரையும், காருடன் சேர்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வாசுதேவநல்லூர் அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்(வயது 19), கனகராஜ் மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கவிக்குமார்(21), ராமர் மகன் கனகராஜ் (22) ஆகிய 4 பேருடன் 17 வயது இளஞ்சிறார்கள் 2 பேர் என்பது தெரிய வந்தது.

அந்த கும்பல் சிவகிரி பகுதியில் செல்போன் செயலி மூலம் வாலிபர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பணத்தை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிப்பதை இவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News