தமிழ்நாடு

சென்னை கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரெயில் சேவை: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2024-02-25 03:02 GMT   |   Update On 2024-02-25 04:46 GMT
  • சென்னை கடற்கரையில் இருந்து இரவு நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
  • கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News