தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-07-17 08:17 IST   |   Update On 2023-07-19 12:37:00 IST
2023-07-17 06:16 GMT

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்

2023-07-17 05:38 GMT

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023-07-17 05:09 GMT

விழுப்புரத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், பொன்முடி ஆதரவு வக்கீல்கள் வீட்டின் முன் குவிந்துள்ளனர்

2023-07-17 05:08 GMT

பொன்முடியின் காரில் ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2023-07-17 04:08 GMT

அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் சோதனை

2023-07-17 04:07 GMT

துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

2023-07-17 04:06 GMT

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே தொடர்ந்து சோதனை- முத்தரசன் குற்றச்சாட்டு

2023-07-17 04:04 GMT

வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2023-07-17 04:04 GMT

2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023-07-17 04:04 GMT

2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

Tags:    

Similar News