தமிழ்நாடு

செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: துரை வைகோ

Published On 2024-03-24 08:53 GMT   |   Update On 2024-03-24 08:53 GMT
  • தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன்.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

திருச்சி:

திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியதாவது:

* அரசியலுக்கு வருவேன் என நான் கனவில் கூட எண்ணிப்பார்த்தது இல்லை.

* தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன். தந்தைக்கு தலைகுனிவு ஏற்பட்டுவிடக்கூடாது என அரசியலுக்கு வந்தேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

* செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதைக்காரன்.

* முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

* என் அப்பா இதே திமுகவில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

* மதிமுக தொண்டர்கள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துள்ளனர் என்று கூறினார்.

Tags:    

Similar News