தமிழ்நாடு

முதலமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Published On 2024-02-22 03:03 GMT   |   Update On 2024-02-22 03:03 GMT
  • பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
  • மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை:

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் 23-ந் தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News