தமிழ்நாடு செய்திகள்

கொரோனா தடுப்பூசி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,059 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-09-10 13:08 IST   |   Update On 2022-09-10 13:08:00 IST
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.
  • 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்:

கொரோனா தொற்றை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (11-ந்தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News