தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

Published On 2024-02-22 04:47 GMT   |   Update On 2024-02-22 08:17 GMT
  • பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகிறார்.
  • நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார்.

சென்னை:

இந்தியாவில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார்.

நாளை காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார். மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது.

மதியம் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

மறுநாள் (24-ந் தேதி) தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். மதியத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.

அதன் பிறகு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

Tags:    

Similar News