தமிழ்நாடு

கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி- விரைவில் பணிகள் தொடங்கும்

Published On 2023-06-22 10:10 GMT   |   Update On 2023-06-22 10:10 GMT
  • மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியது.
  • அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

பேனா நினைவுச் சின்னம் தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், இப்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News