தமிழ்நாடு செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குபதிவு

Published On 2023-02-22 18:48 IST   |   Update On 2023-02-22 18:48:00 IST
  • சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
  • ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு:

கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சீமான் ஈரோடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News