தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2023-12-06 12:13 GMT   |   Update On 2023-12-06 12:13 GMT
  • மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம்.
  • மிச்சாங் புயலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிச்சாங் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் வரும் 18ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம் வழங்கியது.

Tags:    

Similar News