தமிழ்நாடு செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவை 2 நாளில் 18 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறையை கொண்டாட ஏராளமான மக்கள் சுற்றுலா தலமான நீலகிரியில் குவிந்தனர். இதனால் நீலகிரியில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்கள் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 7 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல் அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 342 பேரும், மரவியல் பூங்காவுக்கு 68 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,000 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 350 பேரும் வந்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 11,000 பேர் வந்திருந்தனர்.
ரோஜா பூங்காவுக்கு 3,500 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,300 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 600 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 550 பேரும் வருகை தந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 6,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,000 பேரும் வருகை தந்திருந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவை 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி நகரின் பெரும்பாலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறையை கொண்டாட ஏராளமான மக்கள் சுற்றுலா தலமான நீலகிரியில் குவிந்தனர். இதனால் நீலகிரியில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்கள் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 7 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல் அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 342 பேரும், மரவியல் பூங்காவுக்கு 68 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,000 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 350 பேரும் வந்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 11,000 பேர் வந்திருந்தனர்.
ரோஜா பூங்காவுக்கு 3,500 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,300 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 600 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 550 பேரும் வருகை தந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 6,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,000 பேரும் வருகை தந்திருந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவை 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி நகரின் பெரும்பாலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.