செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலியான கோழிகளை காணலாம்

வள்ளியூர் அருகே வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

Published On 2021-11-18 08:23 GMT   |   Update On 2021-11-18 08:23 GMT
வள்ளியூர் அருகே வெள்ளத்தில் மூழ்கி சுமார் 5 ஆயிரம் கோழிகள் இறந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை இடிமின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

வள்ளியூர் அருகே உள்ள ஆணைகுளத்தில் வில்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணை உள்ளது.

இங்கு சுமார் 7 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். வள்ளியூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்தது. இதனால் கோழிப்பண்ணை காம்பவுண்டு சுவர் திடீரென உடைந்தது.

பின்னர் மழைநீர் பண்ணைக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீரில் அங்குள்ள சுமார் 5 ஆயிரம் கோழிகள் மூழ்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News