செய்திகள்
திருமாவளவன்

புதுச்சேரியில் அநாகரிக அரசியல் நடக்கிறது- திருமாவளவன்

Published On 2021-02-20 03:06 GMT   |   Update On 2021-02-20 03:06 GMT
புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் காலனியில் அரசு பள்ளி கட்டுமான பணியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது. கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் செய்ததை போல தமிழகத்திலும் அநாகரிக அரசியலை செய்ய துடித்து கொண்டிருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News