செய்திகள்
மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

4 தலைமுறை கண்ட 105 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2020-12-07 15:52 IST   |   Update On 2020-12-07 15:52:00 IST
4 தலைமுறை கண்ட பொன்னம்மாள் பாட்டிக்கு அவரது உறவினர்கள் புடைசூழ 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அண வயல் ஜீவா நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி மனைவி பொன்னம்மாள். 105 வயதை எட்டியுள்ள இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த பொன்னம்மாள், தனது மகன்களுக்கு உதவியாக விளை நிலங்களுக்கு சென்று தன்னால் முடிந்த விவசாய பணிகளை செய்து வருகிறார். தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என 20-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

4-வது தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு அவரது உறவினர்கள் புடைசூழ 105-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் அச்சடித்து கொண்டாடப்பட்டது. 100-க் கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழாவில் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் மூதாட்டியிடம் ஆசி பெற்றனர்.

Similar News