செய்திகள்
உயிரிழந்த ராஜேஸ்வரி

கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு

Published On 2020-08-09 10:12 GMT   |   Update On 2020-08-09 10:12 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 4,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,502 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,071 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடலூர் பெண் சர்வேயர் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண் சர்வேயர் ராஜேஸ்வரி உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News