செய்திகள்
காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
காஞ்சிபுரத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகேயுள்ள முசரவாக்கம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகன் ஜெகத்பிரியன் (8). அதே பகுதியில் ரோட்டுத்தெரு சோமு என்பவரின் மகன் சுஜன் (12).
இந்த இரண்டு சிறுவர்களும் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகேயுள்ள முசரவாக்கம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகன் ஜெகத்பிரியன் (8). அதே பகுதியில் ரோட்டுத்தெரு சோமு என்பவரின் மகன் சுஜன் (12).
இந்த இரண்டு சிறுவர்களும் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.