செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-06 09:14 GMT   |   Update On 2020-08-06 09:14 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,938 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,938 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கொரோனாவிலிருந்து 7,675 பேர் குணமடைந்த நிலையில் 2,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News