இந்தியா

மும்பை தேர்தலில் எளிதாக அழியும் மை: தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு- பாஜக பதிலடி

Published On 2026-01-16 17:08 IST   |   Update On 2026-01-16 17:08:00 IST
  • தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது.
  • வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, எளிதாக அழிக்கப்படும் வகையில் இருந்தது என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி "தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்," என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா பதில் கொடுத்துள்ளார். அதில், சாக்குப்போக்கு சொல்லும் படை திரும்பியது! எண்ணிக்கை முடிவதற்குள் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?

ராகுல் தான் சிறப்பாக செய்வதை செய்யத் திரும்புகிறார். இழிவுப்படுத்துதல், திரித்தல் மற்றும் தவறான தகவல். பரம்பரை திருடன் (Khandani chor) இப்போது தாக்கரேக்களின் கூற்றுகளை மீண்டும் எழுப்புகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News